மரக்காணம், பிப். 12: மரக்காணம் அருகே ஆலத்தூர் இணைப்பு சாலை பகுதியில் மரக்காணம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர். அப்போது ஆலத்தூர் பகுதியில் இருந்து மரக்காணம் நோக்கி ஒரே மோட்டார் பைக்கில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி சோதனை செய்து விசாரித்துள்ளனர். இதில் அந்த மூன்று நபர்களும் முரண்பாடான பதிலை கூறினர். இதனால் அவர்களை மரக்காணம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து முறையாக விசாரித்தனர்.