புதுச்சேரி, பிப். 12: புதுவையில் பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் தலைமை அலுவலக பொதுமேலாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு கன்வீனர்கள் சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர்கள் கொளஞ்சியப்பன், தண்டபாணி, மாவட்ட செயலர்கள் அரிதாஸ், தனசேகரன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.