×

வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

தாம்பரம், ஜன.29: பீர்க்கன்காரணையில், வீட்டை உடைத்து, 20 சவரன் நகை, ₹20 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பெருங்களத்தூர் அருகே உள்ள நெடுங்குன்றம், தேவராஜ் நகரை சேர்ந்தவர் துரைமுருகன் (35), தனியார் நிறுவன ஊழியர். கடந்த 24ம் தேதி துரைமுருகன், குடும்பத்துடன் காரைக்குடி சென்றார். நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 20 சவரன் நகை, ₹20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின்படி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு ெசய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் போதுமான போலீசார் இல்லாததே காரணம் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

Tags : House ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்