செங்கல்பட்டு, ஜன.29: செங்கல்பட்டில் நடைபெற்ற முன்னாள் அதிமுக மாவட்ட பிரதிநிதியின், 6ம் ஆண்டு நினைவஞ்சலியையொட்டி ₹3 லட்சத்தில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு அதிமுக நகர செயலாளர் வி.ஆர்.செந்தில்குமாரின் தந்தையும், அதிமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினரும், திருமணி ஊராட்சி முன்னாள் தலைவருமான மறைந்த வி.ராஜகோபாலின் 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி செங்கல்பட்டு ராட்டினகிணறு பகுதியில் நடந்தது. காஞ்சி மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம். முன்னாள் எம்பியும் அதிமுக மாவட்ட மகளிரணி செயலாளருமான மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு சுமார் ₹3 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரம், மிதிவண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும், 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக ராட்டினகிணறு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வி.ராஜகோபாலின் படத்துக்கு மலர் தூவி மாலை அணிவித்து, மௌன அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்சியில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த் ராவ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜெயா ராஜகோபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆறுமுகம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கௌஸ்பாஷா, திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் விஜயரங்கன், அரசு வழக்கறிஞர்கள் சதிஷ்பாபு, வினாயகம், அதிமுக நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், நெல்லை ராதா, சுந்தரராஜன், முரளிதரன், கோபி, கோவிந்தன், ஜெகதீசன், தண்டுகரை குமார், தனகோட்டி, குமார், பூக்கடை மணி, ஜீவரத்தினம், சீனுவாசன், பன்னீர்செல்வம், சிவசங்கரன், ரவி, ஜெயராமன், சதிஷ்குமார், ராஜ்குமார் விஜயகுமாரி, மதுரை, பிரவீன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.