மண்ணச்சநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

மண்ணச்சநல்லூர், ஜன.29: மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த மான் ஒன்றை தீயணைப்பு வீரர்கள் கிராம மக்களின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டனர். மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் சிப்பாய்பண்ணை பகுதியில் சகுந்தலா என்பருக்கு சொந்தமான விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தாகத்திற்கு தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. நேற்று அந்த வழியாக சென்ற அப்பகுதி பொதுமக்கள் கிணற்றுக்குள் புள்ளிமான் ஒன்று தத்தளிப்பதை கண்டு அது குறித்து உடனடியாக ரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கி அந்த மானை உயிருடன் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

Related Stories: