×

முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வாங்கி கொடுத்த பெற்றோர்கள்

முத்துப்பேட்டை, ஜன.29: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் படித்து பல்வேறு பாராட்டுக்களை பெற்றுள்ளனர். அதேபோல் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு சிறப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் கல்வியில் ஆர்வத்துடன் இருக்கும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பல்வேறு கல்வி சார்ந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்மார்ட் கிளாஸ்க்கு ஸ்மார்ட் டிவி தேவை என்ற தகவல் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர;களின் பெற்றோர்களான வீரகுமார், சுதாகர், பட்டுராசன் ஆகியோர் சொந்த செலவில் வாங்கி அன்பளிப்பாக வழங்க முன்வந்தனர். அதன்படி நேற்று ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 எல்.ஈ.டி ஸ்மார்ட் டிவிக்களை தலைமையாசிரியர் சீமானிடம் வழங்கினர். பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக்குழு உட்பட மற்ற பெற்றோர்கள் டிவி வாங்கி கொடுத்த பெற்றோர்களை பாராட்டினர்.

Tags : Parents ,Muthupettai ,government school ,
× RELATED முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி...