கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

பட்டுக்கோட்டை, ஜன. 29: பட்டுக்கோட்டையில் மாவட்ட அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே கராத்தே போட்டிகள் நடந்தது.கராத்தே மாஸ்டர் இளையராஜா வரவேற்றார். விதைகள் அமைப்பின் தலைவர் சிதம்பரம், பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியசாமி, திருச்சி கராத்தே மாஸ்டர் சிகான் ஈஸ்வர்குமார், கராத்தே மாஸ்டர்கள் சென்சாய்பிரபு, சென்சாய்நித்யா, சென்சாய் சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

கராத்தே போட்டியில் 24 அரசு பள்ளிகள் மற்றும் 9 தனியார் பள்ளிகளில் இருந்து 1,126 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பு கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. இதில் அதிக அளவிலான பரிசுகளை அரசு பள்ளி மாணவர்கள் தட்டி சென்றனர்.

Related Stories: