ஒரத்தநாடு அரசு மகளிர் கலை கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா

ஒரத்தநாடு, ஜன. 29: ஒரத்தநாட்டில் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட தேசிய வாக்காளர் தின பேரணி நடந்தது.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேசிய வாக்காளர் தின விழா தாசில்தார் அருள்ராஜ் தலைமையில் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளோடு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாணவிகளின் பேரணியும் நடந்தது. பேரணிக்கு பிறகு மாணவிகளுக்கு தாசில்தார் அருள்ராஜ் வாக்காளர் அடையாள அட்டைகளையும் வழங்கி பேசினார்.

Related Stories: