×

கும்மிடிப்பூண்டி அருகே இடிந்து விழும் ஆபத்தில் அங்கன்வாடி கட்டிடம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

கும்மிடிப்பூண்டி, ஜன. 29:  கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டில் பழுதடைந்த அங்கன்வாடி ைமய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய மையம் கட்டித்தரவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு மேட்டுத்தெரு பகுதியில்  அங்கன்வாடி மையம் உள்ளது. இதன் மேற்கூரை ஆஸ்பெஸ்ட் ஷிட்டால் அமைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்தில் அதே பகுதியை சேர்ந்த ஏழை எளியவர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட  அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து, சுவர்கள் விரிசல் அடைந்துள்ளது. வளாகத்தில் செடிகொடிகள் படர்ந்துள்ளது. இதில் விஷப்பூச்சிகள் அதிகமாக உள்ளது. விஷப்பூச்சிகள் மையத்தின் உள்ளே புகுந்து விடுகிறது.

இந்த விஷப்பூச்சிகள் தீண்டி விடுமோ என பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே பழுடைந்து இடிந்து விழும் ஆபத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது, “மேட்டுத்தெரு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் 30 வருடத்திற்கு முன்பு கட்டியது. இந்த மைய கட்டிடம் தற்போது விரிசல் ஏற்பட்டு செடிகொடிகள் வளர்ந்துள்ளது. மேற்கூரை ஆங்காங்கு உடைந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே ஒழுகுகிறது. இதனால் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். தற்போது வெயில் காலம் தொடங்க உள்ளதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே  சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து  கான்கிரீட் கட்டிடம் கட்டித்த ஆவன செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Anganwadi Building ,building ,Gummidipoondi ,
× RELATED பெருங்களூர் ஊராட்சியில் அங்கன்வாடி...