×

கும்பாபிஷேகத்திற்காக மருந்து இடிக்கும் நிகழ்ச்சி

அருப்புக்கோட்டை, ஜன.29: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்க்கு பாத்தியப்பட்ட அமுதவல்லியம்மன் சமேத அமுதலிங்கேஸ்பரர் கோவில், முத்துமாரியம்மன் கோவில், வாலசுப்பிரமணியர் கோவில், சந்திவீராச்சாமி கோவில், சித்தி விநாயகர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், செங்கோட்டை முனீஸ்வரர் கோவில், முத்து விநாயகர் கோவில், பருத்தி விநாயகர் கோவில் என 9 கோவில்களின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 30ம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிலிருந்து 10.30 மணிக்குள் நடக்க உள்ளது. இதற்கான யாகசால பூஜைகள் கடந்த 24ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பூஜைகள் நடந்து வரும் நிலையில் விமான கோபுரத்தில் கலசத்தில் வரகு தானியம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கருவறையில் உள்ள பீடத்தில் 8 வகையான மருந்துகளை சாற்ற  உரலில் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் அவரது மனைவி சசிகலா சுதாகர் ஆகியோர் மருந்து இடிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.  இதில் உறவின்முறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...