×

மணல் மூட்டை கடத்தல் நான்கு பேர் கைது

திருப்புவனம், ஜன.29: திருப்பாச்சேத்தி மீனாட்சிபுரம் பகுதியில் வைகை ஆற்றில் அடிக்கடி சாக்கு மூட்டைகளில் மணலை அள்ளி காரில் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை போலீசார் ரோந்துக்கு சென்றபோது மீனாட்சிபுரம் வைகை ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளி 30 சாக்கு மூட்டைகளில் காரில் ஏற்றி கொண்டு வேம்பத்தூரில் ஒரு வீட்டில்  இறக்கும் போது போலீசார், சேகர், சபேஸ் பாபு, முத்துகுமார், தெய்வேந்திரன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 30 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்து திருப்பாச்சேத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : persons ,
× RELATED ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது