×

மனிதநேய வார விழா

காளையார்கோவில், ஜன. 29: காளையார்கோவில் அருகில் சமூக நீதி மனித உரிமை பிரிவு சார்பில் மனிதநேய வார விழா சருகணி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முரளிதரன் தலைமை வகித்தார். உதவி காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐபிஎஸ் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்த் பங்கேற்றனர். புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன் வரவேற்புரை வழங்கினார். தேவகோட்டை வட்டாச்சியர் மெசியாதாஸ், அரசு சிறப்பு வழக்கறிஞர் சுரேஷ்குமார்,  மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் பூமிநாதன், ஊராட்சி மன்ற தலைவி பிரகாசி மற்றும் கல்லூரி முதல்வர் சிறப்புரை ஆற்றினார். மனித நேயம் மாய்ந்து விடவில்லை என்ற தலைப்பில் நடந்த ஓவிய போட்டியில் பரிசு பெற்ற மாணவியர்களுக்கு ஏடிஎஸ்பி பரிசு வழங்கினார். கல்லூரி மனைவி இளையபாரதி மனிதநேயம் பற்றி பேசினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர்கள், கல்லூரி  பேராசிரியர்கள், பெற்றோர்கள், பிடிஏ உறுப்பினர்கள், மனித உரிமை பிரிவு காவல் எஸ்ஐ, காவல் ஆளிநர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விழாவின் முடிவில் காவல் ஆய்வாளர் சம்பத் நன்றி கூறினார்.

Tags : Humanities Week Festival ,
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்