×

பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றினால் விபத்தில்லா மாவட்டமாக மாறும் சாலை பாதுகாப்பு வார விழாவில் கலெக்டர் பேச்சு

ராமநாதபுரம், ஜன.29:  ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. விழாவில், கலெக்டர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 20ம் தேதி தொடங்கப்பட்டு மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்திட பேரணிகள், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கட்டுரை போட்டி பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதுபோன்று வருங்காலங்களில் சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆண்டிற்கு ஒரு கோடி மக்கள் வருகை புரிந்து செல்கின்றனர். இதனால் அதிக போக்குவரத்து நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. இக்காரணத்தினால் விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகத்தால் பல தொடர் நடவடிக்கைகள் காவல் மற்றும் போக்குவரத்து துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க முடியும்.விபத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் இருப்பதே. அவ்வாறு சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் வாகனத்தை இயக்கும் நபர்களால் சாலை விதிகளை சரியாக பின்பற்றும் நபர்களுக்கும் விபத்து ஏற்படுகிறது.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, கைபேசியை பயன்படுத்தி கொண்டு வாகனம் இயக்குவது, சீட் பெல்ட் அணியாமல் பயணம் மேற்கொள்வது, அதிக வேகம், இருசக்கர வாகனத்தில் அதிக எடை மற்றும் அதிக நபர்கள் அமர்ந்து ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்வது இதுபோன்ற செயல்களால் அதிக விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்களில் உங்கள் குழந்தைகள் பெற்றோர்கள் நண்பர்கள் ஈடுபட்டால் அவர்கள் ஈடுபடாமல் இருக்க அறிவுரை வழங்குவது ஒவ்வொருவரின் கடமையாகும் என பேசினார். தொடர்ந்து கலெக்டரால், பத்தாண்டு விபத்து ஏற்படுத்தாமல் வாகனம் இயக்கிய தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறை ஓட்டுநர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தால் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கும், சாலை பாதுகாப்பில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பாராட்டி பரிசுகளும் கேடயங்களும மற்றும் சான்றிதழகள்; வழங்கப்பட்டன. இவ்விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் தமிழ்மாறன், மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி, பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள், பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Collector talks ,crash district ,Road Safety Week Festival ,public ,
× RELATED சாலை பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள்