×

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 25% இடஒதுக்கீடு கலெக்டரிடம் மனு

திண்டுக்கல், ஜன. 29: நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் தேசம் கட்சியினர் 15 பேர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அனைவரும் மாவட்ட தலைவர் வேளாங்கண்ணி தலைமையில் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘அனைத்து பகுதிகளிலும் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும். பறையர் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.



Tags : collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...