×

வாலிபர் திடீர் மாயம்

ஈத்தாமொழி: ராஜாக்கமங்கலம்  அருகே தெக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராகவன் மகன் அஜித்(23). இவர் சற்று  மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. சித்தாள் வேலைக்கு சென்று  வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து வெளியே  சென்றவர் பின்னர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த  தகவலும் இல்லை. இதையடுத்து அவரது தாயார் கலைச்செல்வி ராஜாக்கமங்கலம்  போலீசில் புகார் ெசய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அஜித்தை  தேடி வருகின்றனர்.

Tags : Plaintiff ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...