×

பைக் மீது லோடு ஆட்டோ மோதல்

திங்கள்சந்தை: நாகர்கோவிலில் அருகே சுங்கான்கடை வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்மணி (37). இவருக்கு  திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் ஆளூர் பகுதியில் உள்ள ஒரு  பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை இந்த குழந்தைகளை பால்மணியின்  உறவினர் களியங்காடு பகுதியை சேர்ந்த  கார்த்திக் என்பவர் பைக்கில் அழைத்து  வந்தார்.
 பைக் ஆளூர் அரசு பள்ளி அருகே வந்தபோது, எதிரே வந்த ேலாடு  ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த 3  பேரும் தூக்கி  வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு  அந்த பகுதியில் ஒரு உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு  செய்து லோடு ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...