களக்காடு அருகே கிராம சபை கூட்டம்

நெல்லை, ஜன. 29: களக்காடு அருகே கடம்போடுவாழ்வு பஞ்சாயத்து நாடார் குடியிருப்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. களக்காடு யூனியன் ஏபிடிஓ பாலமுருகன் தலைமை வகித்தார். ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சிதம்பரம் கலந்து கொண்டு உடல் நலம் பேணுதல், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்தல், நோய்களில் இருந்து வரும்முன் காத்தல் குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் ஊராட்சி எழுத்தர் கண்ணன், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Related Stories: