×

பைக் விபத்தில் சிறுவன் பலி

நெல்லை, ஜன. 29:  கூடங்குளத்தைச் சேர்ந்த வசந்த் மகன் சூர்யா (16). ஐடிஐ படித்து முடித்துள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் தங்கசெல்வன் (24) என்பவரும்  கூடங்குளத்தில் இருந்து ராதாபுரத்திற்கு பைக்கில்  சென்று கொண்டிருந்தனர். கூடங்குளம் அருகே சென்றபோது பைக் தறிகெட்டு ஓடியதால் நிலை தடுமாறி  பைக்கில் இருந்து விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சூர்யா இறந்தார். கூடங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : bike accident ,
× RELATED பைக் விபத்தில் வாலிபர் பலி