விவசாயியை தாக்கி ரூ.12 ஆயிரம்பறிப்பு

களக்காடு, ஜன. 29: களக்காடு அருகே விவசாயியை கம்பால் தாக்கி ரூ.12 ஆயிரம் பறித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகே உள்ள வடுகச்சிமதிலை சேர்ந்தவர் முருகன் (47). விவசாயி. இவருக்கும், கோதைசேரியை சேர்ந்த ஆறுமுகன் மகன் சுப்பிரமணியன் என்ற மணல் மணிக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று முருகன், களக்காடு மின் அலுவலகம் அருகே நின்றிருந்தபோது மணல் மணி, வடுகச்சிமதிலை சேர்ந்த கந்தையா மகன் மிக்கேல் ராஜ் ஆகியோர் அவரிடம் மது அருந்த பணம் கேட்டனர். அதற்கு முருகன் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை கம்பால் தாக்கி, அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.12 ஆயிரத்தை பறித்து விட்டு தப்பினர். தாக்குதலில் காயமடைந்த முருகன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, மணல் மணி உள்பட இருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: