மூதாட்டி உள்பட 3 பேர் மீது வழக்கு

மேச்சேரி, ஜன.29: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே அரங்கனூர் பொம்மியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பரணிதரன்(32). சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் செம்மனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன்(40) என்பவரின் வீட்டின் முன் பரணிதரன் தனது சரக்கு வேனை நிறுத்தியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, சுந்தரராஜன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன்(70), அலமேலு(60) ஆகியோர் பரணிதரனை சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளனர். மேலும், வண்டியை கொளுத்தி விடுவதாக கூறி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், சுந்தரராஜன் உள்பட 3 பேர் மீதும் சாதி பெயரை கூறி திட்டியதாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: