ஆரியகவுண்டம்பட்டியில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குடம் ஊர்வலம்

இளம்பிள்ளை, ஜன.29: ஆரியகவுண்டம்பட்டியில் அய்யனாரப்பன், கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை அடிவாரம் ஆரியகவுண்டம்பட்டி, அய்யன்னவளவில் அமைந்திருக்கும் அய்யனாரப்பன், கருப்பண்ண சுவாமி கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை(30ம் தேதி) கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, தாரை-தப்பட்டை முழங்க குதிரை, பசுமாடுகளுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் சென்றது. பின்னர், கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Related Stories: