ஏற்காடு அரசு பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

ஏற்காடு,  ஜன.29: ஏற்காட்டில் உள்ள செங்காட்டில் அரசு நடுநிலை பள்ளிக்கு சேலம் காஸ்மாஸ்  மற்றும் சென்னை மித்ரா ரோட்டரி கிளப் இணைந்து, ₹3.5 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகத்தை கட்டிக் கொடுத்துள்ளனர். இதனை பள்ளிக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி,  சேலம் ரோட்டரி தலைவர் ராஜேஸ் ரத்தோடு தலைமையில் நடைபெற்றது. செயலாளர்  சிவஜோதி கண்ணன் முன்னிலை வகித்தார். ரோட்டரி ஆளுனர் நிர்மல் பிரகாஷ்  கழிவறையை திறந்து வைத்து, அதனை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி  அலுவலர் அலெக்சாண்டர், ரோட்டரி புராஜக்ட் சேர்மன் சீனிவாசன், தினேஷ்  மேத்தார், வார்டு உறுப்பினர் சீனிவாசன், தேவா உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியை  வனஜகுமாரி நன்றி கூறினார்.

Related Stories: