சேலம், ஜன.29: சேலம் வாய்க்கால்பட்டறையில் உள்ள ஜெய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெய் மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ஜெய் நர்சரி பிரைமரி பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. சேலம் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் கூறுகையில், ‘மாணவர்கள் படிப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்டு படிக்க வேண்டும். பெற்றோர் தங்களுக்கு பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்து இதுதான் படிக்க வேண்டும் என குழந்தைகளிடம் திணிக்க கூடாது.