×

ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிகள் சாதனை

பரமத்திவேலூர், ஜன.29: நாமக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.இதில் பரமத்திவேலூர் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் பரமத்திவேலூரில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் பாண்டமங்கலம் ஆர்.என். ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பேச்சுப்போட்டியில் தீபிகா முதலிடமும், நவீன்பிரகாஷ் இரண்டாமிடமும், ஓவியப்போட்டியில் யாழினி முதலிடமும், கவிதைப்போட்டியில் ஜீவஸ்ரீ 3ம் இடமும், அனுஸ்ரீ ஆறுதல் பரிசும், சாலைப்பாதுகாப்பு குறித்த ஸ்லோகன் எழுதும் போட்டியில் சவுந்தர்யா முதலிடமும், சுவாதி ஆறுதல் பரிசு பெற்றுள்ளனர். இதேபோல், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவி ரியா பேச்சுப்போட்டியில் முதல் இட மும், அக்சிதா 2ம் இடமும், ஓவியப்போட்டியில் சிந்தனா மூன்றாமிடமும், கவிதைப்போட்டியில் சுவேஷ்லா முதலிடமும், தருண்ஸ்ரீ 2ம் இடமும், பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் மனோகரன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். அதே போல் ஆர்.என்.ஆக்ஸ்போர்ட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் அருள்,  சேகர், சம்பூரணம், மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : RN ,Oxford School Students Achievement ,
× RELATED ராஜஸ்தான் தினத்தை ஒட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!