×

பசுமை சூழல் அமைப்பின் சார்பில் 500 மரக்கன்று நடும் விழா எம்எல்ஏ தொடங்கி வைத்தார் பசுமை சூழல் அமைப்பின் சார்பில் 500 மரக்கன்று நடும் விழா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சேந்தமங்கலம், ஜன.29: சேந்தமங்கலம் பசுமை சுற்றுச்சுழல் அமைப்பின் சார்பில் சேந்தமங்கலம் எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளில் பனைவிதை, மரக்கன்றுகள் நட்டு நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பச்சுடையாம்பட்டி ஊராட்சி காளியம்மன் கோயில் அருகில் உள்ள ஏரியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிறுவனர் சரவணன் தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாஸ்கர், நிர்வாகிகள் வெண்ணிலா செந்தில், பூபதி, ஸ்டாரா செந்தில், கென்னடி அமைப்பின் உறுப்பினர்கள் நந்தினி, பிரியா, ராஜ்குமார்,  மணிமொழியன், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,tree planting ceremony ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்