×

எர்ணாபுரம் அரசு பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி

நாமக்கல், ஜன.29: நாமக்கல் அருகே எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ், திண்டமங்கலம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ- மாணவியர் நேற்று வருகை புரிந்தனர்.
இதையொட்டி பள்ளியில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நூலகப் புத்தக வாசிப்பு நடைபெற்றது. பின்னர், மாணவ- மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. களப்பணியாக அருகிலுள்ள  தனியார் நூற்பாலைக்கு மாணவ, மாணவியரை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் அழைத்துச் சென்றனர். நூற்பாலை செயல்படும் விதம், அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மேனகா மற்றும் ஆசிரிய, ஆசிரியகைள், வட்டார வளமைய மேற்பார்வையயாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ernakulam Government School ,
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு