×

அதிகாரிகள் வருகையால் கழிப்பறைகளுக்கு பூட்டு

தென்னக ரயில்வே பொது மேலாளர் நேற்று மதியம் 2.30 மணிக்கு நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, ஸ்டேஷன் வளாகம் முழுவதும் பளீச் என காட்சி அளித்தது. ரயில்வேத்துறை உயரதிகாரிகள் வருவதையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் இருந்த அனைத்து கழிப்பறைகளும் பூட்டப்பட்டிருந்தது. பொது மேலாளர் மற்றும் ரயில்வேத்துறை அதிகாரிகள் சிறப்பு ரயிலில் மாலை 5.40 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். ஆய்வினை முடித்து விட்டு இரவு 6.50 மணிக்கு சிறப்பு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். அதற்கு பிறகே கழிப்பறைகள் திறக்கப்பட்டன. இதனால், நேற்று நாமக்கல்லில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு