×

திருச்செங்கோட்டில்\ அதிமுக வக்கீல்கள், தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

திருச்செங்கோடு, ஜன.29: திருச்செங்கோட்டில் அதிமுக மற்றும் தேமுதிகவினர் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். திருச்செங்கோட்டில் அதிமுக, தேமுதிக கட்சி நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதிமுகவைச் சேர்ந்த திருச்செங்கோடு குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வெங்கட் கண்ணன், வழக்கறிஞர்கள் உஷா ஆனந்தி, மோகனா, சுந்தரம், தனசேகர்,மணி  உள்ளிட்ட 10 வழக்கறிஞர்கள் மாவட்ட திமுக அலுவலக்ததி–்ல் மாவட்ட செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ வை சந்தித்து சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தனர். இதேபோல், தேமுதிக நாமக்கல் மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சண்முகம் தனது ஆதரவாளர்கள் சுமார் 50 பேருடன்  திமுகவில் இணைந்தார். திமுவில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து மாவட்ட செயலாளர் மூர்த்தி  எம்எல்ஏ வரவேற்றார். அப்போது, நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், வார்டு செயலாளர் ராஜவேலு மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய  நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Tiruchengode ,lawyers ,AIADMK ,DMK ,
× RELATED லாரியில் கொண்டு வந்த ₹1.13 லட்சம் பறிமுதல்