×

ஓசூர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 8 பவுன் நகை கொள்ளை

ஓசூர், ஜன.29: கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே உள்ள ஜிகலம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரம்மா(52). இவரது தங்கை நீலா. இவர் ஓசூர் அருகே உள்ள அந்திவாடியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நீலாவின் 8 பவுன் நகை, சந்திரம்மாவிடம் இருந்தது. இந்த நகையை நீலா கேட்டுள்ளார். இதற்காக சந்திரம்மா நேற்று முன்தினம் மாலை 8 பவுன் நகையை எடுத்து பையில் வைத்து கொண்டு ஓசூருக்கு பஸ்சில் சென்றுள்ளார். ஓசூருக்கு சென்று சேர்ந்த பின் பஸ் நிலையத்தில் நகையை பார்த்தார். அப்போது, பையில் நகை இருந்தது. பின்னர் டவுன் பஸ் மூலம் அந்திவாடியில் இறங்கி வீட்டிற்கு சென்றார். அங்கு பையை திறந்து நகையை பார்த்தபோது, அதிலிருந்த நகைகளை மாயமாகி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சந்திரம்மா இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் புகாரளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்