×

புதன்சந்தையில் மாடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம், ஜன.29: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை மாட்டுச் சந்தை கூடுவது வழக்கம். மாடுகளை வாங்க, விற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருவார்கள். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாடுகளை வாங்க விற்க வியாபாரிகள் இச்சந்தைக்கு  வருவதுண்டு. நேற்று கூடிய சந்தையில் பொங்கல் பண்டிகை நிறைவு பெற்றதையொட்டி விவசாயிகள் அதிக அளவிலான மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.மேலும் கேரளாவில் இருந்து குறைவான வியாபாரிகள் வந்திருந்ததால் மாடுகள் விலை குறைந்தது. கடந்த வாரம் ₹15 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட மாடு இந்த வாரம் ₹13 ஆயிரத்திற்கும், கடந்த வாரம் ₹39 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு ₹37 ஆயிரத்திற்கும் விற்றது. கடந்த வாரம் ₹12 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுகுட்டிகள் ₹10 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்