×

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர்

தேன்கனிக்கோட்டை, ஜன.29: தேன்கனிக்கோட்டை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபரை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கித்வாய் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் முரளி(26). இவரும் அதே தெருவை சேர்ந்த 17 வயது இளம்பெண்னும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்ததால் இளம் பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் முரளியிடம் கேட்டுள்ளார். அதற்கு முரளி, திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து, பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில், மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக முரளி மீது புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சாவித்திரி முரளியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags : Plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது