×

₹33 லட்சத்திற்கு எள் பருத்தி விற்பனை

திருச்செங்கோடு, ஜன. 29: திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ₹33 லட்சத்திற்கு எள் மற்றும் பருத்தி விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள் விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நேற்று நடந்தது. சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் எள் ரகங்களைக் கொண்டு வந்தனர். 50 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இவற்றை வாங்க பவானி, அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு பகுதிகளைச்சேர்ந்த சுமார் 30 வியாபாரிகள் வந்தனர். ரகசிய டெண்டர் முறையில் எள் ₹3 லட்சத்திற்கு விற்பனையானது.சிவப்பு எள் ₹93.60 முதல் 129.90 வரை விற்றது. வெள்ளை எள் ₹95.70 முதல் 115.90 வரை விற்றது. கருப்பு எள் ₹101.50 முதல் 135.50 வரை விலை போனது. 1500 மூட்டை பருத்தி ₹30 லட்சத்திற்கு விற்பனையானது. பிடி காட்டன் ₹4599 முதல் 5692 வரை விலை போனது.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு