×

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை



திருப்பூர், ஜன.29:  திருப்பூரில் பா.ஜ. வடக்கு மாவட்ட சார்பில் நடைபெற்ற  குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து தெருமுனை பிரச்சாரத்திற்கு வந்த வந்த முன்னாள் எம்பி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் முறைப்படி கும்பாபிஷேக நடத்துவதை வரவேற்கின்றேன். அதே போல் இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் வழிபட வேண்டும். காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பது வேதனை அளிக்கிறது. அஸ்ஸாம் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து ஒரு சில அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இது போன்ற தீய சக்திகளை மக்கள் நிராகரிக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு மதத்திற்கும் மக்களுக்கும் பாதிப்பு இல்லை என்பதை தெருமுனை பிரசாரத்தின் மூலம் பொதுமக்களுக்கு விளக்கிக் கொண்டு வருகிறோம், விரைவில் இந்த சட்டத்தை மக்கள் முழுமையாக புரிந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : No one ,
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...