தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி

திருப்பூர், ஜன.29: திருப்பூரில் தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் தலைமையில் (29ம் தேதி) இன்று காலை 10.30 மணிக்கு அவினாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. இதில், பல்வேறு துறையை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித்தொகை குறித்த விளக்கப்படம் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இதில் அனைத்து கல்லூரி மாணவர், மாணவிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: