×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்

திருப்பூர், ஜன.29: திருப்பூர் கொங்கு ரத்ததான மையம் மற்றும் மாநகர காவல்துறை சார்பில், 31வது சாலை பாதுகாப்பு வார விழா, காந்தி நகரில் நடந்தது. விழாவுக்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் ரோபோ ரவி தலைமை வகித்தார். மாநகர தலைவர் சுரேஷ்குமார், மாநகர பொருளாளர் வேலுமணி ஆகியோர் வரவேற்றனர். மாநகர துணைச் செயலாளர் தம்பி வெங்கடாசலம், பொருளாளர் ரங்கராஜ், ரத்ததான பொறுப்பாளர் செல்வக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் உள்ளிட்ட போக்குவரத்து விதிகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, ெஹல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது.

Tags : motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...