பொள்ளாச்சி, ஜன.29: பொள்ளாச்சியை அடுத்த உப்பாற்றில் மீண்டும் ஆகாயதாமரை படர்ந்துள்ளது. இதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அருகே ஆழியார் ஆறு செல்லும் வழித்தடமான மயிலாடுதுறை, ஆனைமலை, அம்பராம்பாளையம் மற்றும் ஆத்துப்பொள்ளாச்சி பகுதிகளில் அவ்வபோது ஆகாயதாமரை படர்ந்திருப்பதை காணமுடிகிறது. இதில், அதிகப்படியாக ஆனைமலையையொட்டி செல்லும் ஆழியாறு மற்றும் உப்பாற்றில் ஆகாயதாமரை படர்கிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஆழியார் மற்றும் உப்பாற்றில் ஆங்காங்கே தேங்கி இருந்த ஆகாயதாமரைகளை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.