×

வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

பொள்ளாச்சி, ஜன.29: பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (55), கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம்,  திப்பம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த  ராஜசேகர் (35) என்பவர், சக்திவேலுவிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். ஆனால், சக்திவேல் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், சக்திவேலுவின் சட்டை பையிலிருந்து ரூ.500ஐ பறித்து கொண்டு தப்பியோட முயன்றார். இதையறிந்த அப்பகுதியினர், அவரை துரத்தி பிடித்தனர். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜசேகரை கைது செய்தனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு