×

தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை

கோவை, ஜன.29: கோவையில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். *கோவை பெரியநாயக்கன்பாளையத்தினை சேர்ந்தவர் ரமேஷ்(34). கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த ரமேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். *கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகையை சேர்ந்தவர் செல்வன்(44). இவருக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சில நாட்களாக விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட செல்வன் சம்பவத்தன்று வீட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த சிறுமுகை போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை