பைக் மோதி முதியவர் பலி

மேல்மலையனூர், ஜன. 29:

மேல்மலையனூர் தாலுகா அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் மணிமாறன் (55). சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தனது உறவினர்களை பார்க்க கன்னலம் கிராமத்திற்கு வந்துள்ளார். கன்னலத்திலிருந்து வளத்திக்கு நடந்து சென்றவர் மீது செஞ்சியில் இருந்து சேத்பட் நோக்கி சென்ற பைக் அண்ணமங்களம் பெட்ரோல் பங்க் அருகே மணிமாறன் (55) மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: