திருக்கோவிலூர், ஜன. 29: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆவிகொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (21). இவர் கடந்த 3 வருடமாக திருப்பூர் பகுதியில் உள்ள கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். அப்போது, அங்கு பணியாற்றிய திருக்கோவிலூர் அருகே அம்மன்கொல்லைமேடு கிராமத்தை ேசர்ந்த தேவராஜ் மகன் தேவேந்திரன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு வாடகை வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவேந்திரன் சொந்த ஊரான அம்மன்கொல்லைமேட்டுக்கு இருவரும் வந்துள்ளனர்.