×

திருக்கோவிலூர் அருகே காதல் மனைவியின் தாலியை பிடுங்கி கொலை மிரட்டல்

திருக்கோவிலூர், ஜன. 29: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆவிகொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (21). இவர் கடந்த 3 வருடமாக திருப்பூர் பகுதியில் உள்ள கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். அப்போது, அங்கு பணியாற்றிய திருக்கோவிலூர் அருகே அம்மன்கொல்லைமேடு கிராமத்தை ேசர்ந்த தேவராஜ் மகன் தேவேந்திரன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு வாடகை வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவேந்திரன் சொந்த ஊரான அம்மன்கொல்லைமேட்டுக்கு இருவரும் வந்துள்ளனர்.

அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு சென்ற போது தேவேந்திரன் உறவினர்கள் முத்தாயி, தாயார் பாஞ்சாலை ஆகிய 2 பேரும் சேர்ந்து லட்சுமியை தாக்கி திருட்டுத்தனமாக என் மகனை திருமணம் செய்து கொண்டாயா? எனக் கேட்டு திட்டியுள்ளனர். தேவேந்திரனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு லட்சுமி கழுத்தில் இருந்த தாலி, காலில் இருந்த மெட்டியை கழற்றிக் கொண்டு அவரது பெற்றோர் ஊரான ஆவிக்கொளப்பாக்கத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து லட்சுமி திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து தேவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Thirukkovilur: Torture of Romantic Wife ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை