×

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருக்ேகாவிலூர், ஜன. 29:திருக்கோவிலூர் அருகே இரும்பளங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி பழனியம்மாள் (38). ஆந்திராவை சேர்ந்த இவரது சகோதரர் கண்ணன் மகன் ஜெயராஜ் (21). பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவரது வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயராஜ் இரும்பளங்குறிச்சியில் உள்ள தனசேகர் என்பவர் நிலத்தில் குளிக்க ெசன்றுள்ளார். அப்போது மின்கம்பத்தில் இருந்து மோட்டார் கொட்டகைக்கு ஒயர் செல்லும் இரும்பு பைப்பை பிடித்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த திருப்பாலப்பந்தல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பழனியம்மாள் திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை