உளுந்தூர்பேட்டை, ஜன. 29: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து கிளியூர், எம்.குண்ணத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையில் தனியார் பள்ளிக்கு அருகில் உள்ள வளைவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் சாலையின் நடுவே உள்ளதால் அந்த வழியாக இருசக்கர மற்றும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய வளைவு என்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் பகல் மற்றும் இரவு நேரத்தில் ஏராளமானவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த வழியாக தினந்தோறும் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகளும் இந்த பள்ளம் உள்ள வளைவில் திரும்பும் போது அச்சத்துடன் சென்று வருகின்றனர்.