×

பள்ளி மாணவி கடத்தல்

உளுந்தூர்பேட்டை, ஜன. 29:  உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் இதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில் சிறுமியை இதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கிரி என்கிற மணிகண்டன்(24) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் குமார் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சடையப்பிள்ளை வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகிறார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை