×

விவசாயிகளுக்கு எலிப்பொறி வழங்கல்

பண்ருட்டி, ஜன. 29:  பண்ருட்டி வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நிலத்தில் பூச்சி மற்றும் எலிகளை அழிப்பதற்காக எலிப்பொறிகள்,
எலி மருந்து ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி சேமகோட்டையில் நடந்தது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு வழங்கினார். பூங்குணத்தில் உயிரியல் பூச்சி கொல்லி  உற்பத்தி மையத்தை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிப்பதற்கு அறிவுரை வழங்கி விவசாயிகளுக்கு எலிப்பொறிகள் வழங்கினார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயா, வேளாண்மை அலுவலர்கள் மற்றும் துணை வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது