×

உளுந்து பயிர் விளைச்சல் போட்டி

பண்ருட்டி, ஜன. 29: பண்ருட்டி வேளாண்மைத்துறை சார்பில் மணம்தவிழ்ந்தபுத்தூரில் மாநில அளவிலான உளுந்து பயிரில், விளைச்சல் போட்டிக்கான அறுவடை முகாம் நடந்தது. பண்ருட்டி வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் செல்வபாண்டியன் முன்னிலையில் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பல்வேறு பகுதியிலிருந்து பதிவு செய்த விவசாயிகள், உளுந்தை அறுவடை செய்வதில் சிறப்பாக அறுவடை செய்த விவசாயிக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில் பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் விஜயா, துணை வேளாண்மை அலுவலர் ராஜ்குமார், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் வீராசாமி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு