புதுச்சேரி, ஜன. 28: புதுச்சேரியில் மாணவிகளின்றி பெயரளவில் மட்டுமே செயல்படும் அரசு மகளிர் ஐடிஐயால் கோடிக்கணக்கில் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. இதனால் ஆண்கள் ஐடிஐயுடன் இணைக்க கோரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 1978ம் ஆண்டு முதல் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையமும் (ஐடிஐ), 1985 முதல் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையமும் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளின் சேர்க்கை மிகக்குறைவாகி பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மகளிர் ஐடிஐயில் 7 தொழில்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் ஒரு தொழிற்கல்வியில் (கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டென்ட்) மட்டும் 25 மாணவிகள் படிக்கின்றனர். பிற 2 பிரிவுகளில் 10 மாணவிகளும், 5 பிற தொழில் பிரிவுகளில் மாணவிகளே இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியர் மற்றும் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் என 26 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடியே 55 லட்சத்து 84 ஆயிரம் செலவிடப்பட்டு வருகிறது. அதேநேரம், ஆண்கள் ஐடிஐயில் அனைத்து தொழில்பயிற்சி பிரிவுகளிலும் 260 மாணவர்
களும் படிக்கின்றனர். 32 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.