விழுப்புரம், ஜன. 28: நீர்பிடிப்பு பகுதியில் உள்ள வீடுகளை இடிக்க நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சத்தியமங்கலம் கிராமத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பல தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். மசூதிதெரு, பாளைத்தெரு, செட்டித்தெரு என சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடும்பஅட்டை, ஆதார்கார்டு உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நீர் ஆதாரத்தை பெருக்குவோம் என்ற பேரில் 180 குடும்பங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.