×

முன்விரோத தகராறில் 5 பேர் மீது தாக்குதல்

பண்ருட்டி, ஜன. 28:பண்ருட்டி அருகே முத்தரசன்குப்பத்தை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன்(52), பழனிசாமி(42). இருவரும் சகோதரர்கள். வீட்டு மனை சம்பந்தமாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சிவசுப்ரமணியன் தான் கட்டி வரும் வீட்டு பணிகளை தினந்தோறும் கவனித்து வருகிறார். இதில் நேற்று முன்தினம் பள்ளம் தோண்டும்போது பழனிச்சாமிக்கு சொந்தமான குடிநீர் பைப் சேதமடைந்தது. இதனால் தகராறு ஏற்பட்டு பழனிசாமி, அவரது ஆதரவாளர்கள் சிவசுப்ரமணியன், அவரது மனைவி தமிழ்செல்வி, மகள்கள் செந்தமிழ்செல்வி, வான்மதி, கலைச்செல்வன் ஆகியோரை தாக்கினர். இதில் காயமடைந்த 5 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சிவசுப்ரமணியன் காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பழனிச்சாமியை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது