சிவகாசி, ஜன. 28:சிவகாசி போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்த சமுத்திரம் (57), பாலமுருகன் (20), முருகன் (45), ஞானசேகர் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், திருத்தங்கல், எம்.புதுப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 164 மதுபாட்டில்கள், ரூ.8290 பறிமுதல் செய்யப்பட்டது.